Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தினர் :

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் அஞ்சல் வாக்கு செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் துறையினர் கோவை சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,

மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் சூலூர், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிஆர்எஸ் மைதானத்திலும், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த காவலர்கள் மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா கல்யாண மண்டபத்திலும், வால்பாறை, பொள்ளாச்சி தொகுதியைச் சேர்ந்த காவலர்கள் பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்திலும் வாக்களித்தனர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அஞ்சல் வாக்குகளை அங்கு வைக்கப்பட்டிருந்த, பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த பிரத்யேக பெட்டியில் போட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது,‘‘ மாவட்டத்தில் மொத்தம் 2,953 காவலர்கள் அஞ்சல் வாக்குசெலுத்த தகுதி பெற்று இருந்தனர். மாலை4 மணி நிலவரப்படி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் 847 வாக்குகள், பிஆர்எஸ் மைதானத்தில் 247 வாக்குகள், மேட்டுப்பாளையத் தில் 252 வாக்குகள், பொள்ளாச்சியில் 209 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 52.72 சதவீதம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x