Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதியத்துக்கான ஆணை :

‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டது.

‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம், பெல் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அன்றைய தினமே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 (ஓய்வூதியம்) டாக்டர் சுதிர் குமார் ஜெய்ஸ்வால் இதற்கான ஆணையை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கினார். சென்னை வடக்கு மற்றும் தெற்கு பகுதிக்கான மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 ரிதுராஜ் மேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x