Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM
தமிழகத்தில் மின் விநியோகத்தை சீரமைத்தது அதிமுக அரசுதான் என்று புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறினார்.
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பாண்டியராஜனை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு திருமுல்லைவாயல், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஏ.சி.சண்முகம் பேசியதாவது:
திமுக ஆட்சியில் தமிழகத்தில் 18 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அதை சரி செய்து, மின் விநியோகத்தை சீரமைத்தது அதிமுக அரசுதான். தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களால் பிற மாநிலங்கள் திகைத்துநின்றன. கடந்த தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை, தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளால்தான் தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்து, இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தியுள்ளார் முதல்வர் பழனிசாமி. அதேபோல, எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 9 தனியார் கல்லூரிகள் தொடங்க அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT