Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் போட்டியிடுகிறார். இவர் கடந்த 20 நாட்களாக தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக அவர் வாக்கு சேகரிப்புக்கு வரவில்லை. கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு இரு தினங்களுக்கு முன்பு ஜோசப் சாமுவேலுக்கு ஆதரவாக அம்பத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது டி.ஆர்.பாலு, ஜோசப் சாமுவேல் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்குப் பதிலாக நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
இந்நிலையில், ஜோசப் சாமுவேலுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT