Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

மாவட்ட கருவூலங்கள்ஏப்.2, 3, 4-ல் செயல்பட தேர்தல் துறை அறிவுறுத்தல் :

கருவூலம், கணக்குத் துறை ஆணையருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலோடு தொடர்புடைய அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சம்பள கணக்கு மற்றும் கருவூலத்துறையில் செலவு பில்களை கொடுத்து பணம் பெறவேண்டியுள்ளது. அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சம்பளகணக்கு அலுவலகங்கள் அனைத்தும் ஏப்ரல் 2, 3, 4-ல் செயல்பட வேண்டும். அதற்கான உத்தரவுகளை தொடர்புடைய மாவட்ட கருவூல அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x