Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

தேர்தல் பிரச்சாரத்தில் மோதல் - பொள்ளாச்சி அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு :

பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து, பெண் விடுதலைக் கட்சியின் தலைவர் சபரிமாலா நேற்று முன்தினம் இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர் பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வடக்கிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சந்தேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சதீஷ்குமார் என்பவர் அளித்த புகாரில், திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் தன்னை தரக்குறைவாக திட்டியதுடன், கொலைமிரட்டல் விடுத்ததாகவும், அவருடன் வந்த தென்றல் செல்வராஜ், தென்றல் மணிமாறன், மருதவேல், நவநீதன், பார்த்தசாரதி ஆகியோரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, திமுக வேட்பாளர் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x