Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
சென்னை மதுரவாயல் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான பெஞ்சமின் நேற்று ராமாபுரம் மைக்கேல் கார்டன், சாந்தி காலனி, வெங்கடேஸ்வரா நகர், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ராமாபுரத்தில் அடையாறு கால்வாய் தூர்வாரப்பட்டு, ஆழப் படுத்தி தடுப்புச் சுவர் கட்டப் பட்டு, தரைப்பாலம் உயர்நிலைப் பாலமாக மாற்றியமைக்கப்பட் டுள்ளது. அதேபோல, ராமாபுரம் ஏரியும் தூர்வாரப்பட்டு, ஆழப் படுத்தி, நடைபாதைகள் அமைக் கப்பட்டுள்ளன. பஜனை கோயில் தெருவில் ரூ.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. அனைத்து தெருக் களிலும் தார் சாலைகள் போடப் பட்டுள்ளன.
ராமாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிக் கப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக வெற்றி பெற்ற 100 நாட்களுக்குள், வீடுகள், கடைகள், தொழிற் சாலைகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, போரூர், காரப்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரப்பாக்கம் பகுதி யில் இஸ்திரி கடைக்குச் சென்ற அவர், துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT