Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 உயர்வு :

தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33 ஆயிரத்து 846-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் வணிகத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பதால், அதன் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.

கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33 ஆயிரத்து 856-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 232-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்து 216-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x