Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பண்ணை காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் பண்ணை அமைந்துள்ளது. இங்கு, காவலாளியாகப் பணிபுரிந்தவர் செல்வராஜ்(55). இவர், மனைவி சித்ராவுடன் அங்கேயே குடியிருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் துணையுடன், செல்வராஜைத் தேடியுள்ளனர். பின்னர் சித்ரா வீடு திரும்புவிட்டார்.
அப்போது, இருவர் அவரது வீட்டுக் கதவை தட்டி, அவரது கணவரைக் கொன்றுவிட்டதாகக் கூறிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் மீண்டும் தேடியபோது, பண்ணையில் உள்ள வண்டித்தடத்தில், பலத்த காயங்களுடன் செல்வராஜ் இறந்துகிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு போலீஸார்,செல்வராஜ் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், செல்வராஜைக் கொலை செய்தது யார் என்று விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT