Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

கோட்டூர்புரம், திருவொற்றியூர் கோயில்களில் சசிகலா வழிபாடு :

சென்னை

கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் சசிகலா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூரு சிறைவாசத்துக்குப் பிறகு சென்னை திரும்பினார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். பின்னர் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அதையடுத்து எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள விநாயகர் கோயில், சிவன் கோயிலில் சசிகலா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதையடுத்து கோட்டூர்புரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் வழிபட்டார். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள பிடாரி  இளங்காளியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சசிகலாவைப் பார்த்த திருமண வீட்டார் மணமக்களை ஆசிர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி மணமக்களை சசிகலா ஆசிர்வதித்தார். மணமக்கள் சசிகலாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கும் சென்று சசிகலா வழிபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x