Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது :

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடர்பாக, தர்ஷன்குமார் (25), ராகேஷ் (28) ஆகியோரை கேரள போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், இவர்கள் கோவை ரயில் நிலையம் அருகே இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவை ரயில்வே போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, கோவை ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீஸார், நேற்று வாகன நிறுத்துமிடத்தில் சுற்றித் திரிந்த தர்ஷன்குமார், ராகேஷ் ஆகியோரைப் பிடித்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். தகவலறிந்து வந்த கேரளபோலீஸார், இருவரையும் கைது செய்து, கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x