Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM
கரீபியன் தீவுகளில் உள்ள ஜமைக்கா, பார்படாஸ், ஆன்டிகுவா ஆகிய நாடுகளுக்கும் இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா அனுப்பி வைத்த கரோனா தடுப்பு மருந்து, ஜமைக்காவுக்கு கடந்த வாரம் சென்று சேர்ந்தது. இதை அனுப்பி வைத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கிறிஸ் கெயில் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், ஜமைக்கா நாட்டுக்கு நன்கொடையாக கரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்ததற்கு மரியாதைக்குரிய பிரதமர் மோடி, இந்திய மக்கள், இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உதவியை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். உங்கள் உதவிக்கு மிகப்பெரிய நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜமைக்கா பிரதமர்ஆன்ட்ரூ ஹோல்நெஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இந்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் அஸ்ட்ராஜெனிகா கரோனா தடுப்புமருந்துகளை நாங்கள் பெற்றுக்கொண்டோம் என்று தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவசியமான இந்த நேரத்தில் உதவி செய்த இந்திய அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT