Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

பயிற்சி வகுப்பில் பங்கேற்கத் தவறினால் - வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியிடை நீக்கம் : மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை மாவட்டத்தில் முதல்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்காத வாக்குச் சாவடி அலுவலர்களுக்காக 21-ம் தேதி மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. அதில் பங்கேற்காத அலு வலர்கள் பணியிடை நீக்கம் செய் யப்படுவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளா்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5,911 வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கடந்த 13-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள தவறிய வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை, தொடர்புடைய துறை வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அறிவுரைப்படி மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பணி யாளர்கள் தவிர வேறு எவருக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

முதற்கட்ட பயிற்சியில் பங்கேற் காத அலுவலர்களுக்கு 21-ம் தேதி மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இது தொடர்பான பணிஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணை, வருவாய் துறை அலுவலர்களால், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தொடர்புடைய துறை மூலம் வழங்கப்படும்.

குறுந்தகவல் மூலம் தகவல்

மேலும் வாக்குச்சாவடி அலுவலர் களின் கைபேசி வழியாக குறுந்தகவல் மூலமாகவும் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். இதில் கலந்துகொள்ளத் தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலு வலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x