Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு : திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

‘‘நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால், எனது கோரிக் கைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை,’’ என திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் தொகுதிக் குட்பட்ட பிள்ளையார்பட்டியில் கே.ஆர்.பெரியகருப்பன் பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் என்.வைரவன்பட்டி, சமத்துவபுரம், கும்மங்குடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங் களில் வாக்குச் சேகரித்துப் பேசியதாவது:

நான் 4-வது முறையாக ஒரே தொகுதியில் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறேன். திருப்பத்தூர் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளேன். கடந்த 2 முறை நான்எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால், எனது கோரிக் கைகளை அதிமுக அரசு புறக்கணித்து விட்டது. இந்த முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் உங்களது குறைகள் அனைத்தும் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் அத்தி யாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. மேலும் பாஜக அரசு, அதிமுக அரசை கைப்பாவையாக வைத்துக் கொண்டு மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x