Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

துப்பாக்கியுடன் திரிந்த இருவர் கைது :

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள புதூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது, இருவர் தப்பியோடிவிட்டனர். மற்ற இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்(24) , பல்லடத்தைச் சேர்ந்த அஜீத்பாண்டியன்(27) என்பது தெரியவந்தது. அவர்களிடம் ‘ஏர்கன்’ வகையிலான துப்பாக்கி இருந்தது. மேலும், இவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவான மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x