Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ரயில்வே துறைக்கான மானிய ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர் ரயில்வே துறையில் தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் துறையின் செயல்பாடுகளை மேலும் சிறப்பானதாக்க முடியும் என்றார். நாடு அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தனியார் முதலீடுகள் அவசியம். இதற்கு அரசுடன் தனியாரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. இது இந்தியர்கள் அனைவரது சொத்தாகும்.
இந்த சொத்து அப்படியே பராமரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT