Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
அஸ்ட்ராஜெனிகா மற்றும்ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கின.
இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இந்தத் தடுப்பூசி ரத்த உறைதலை ஏற்படுத்துவதாக புகார் எழுந்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் அவ்வாறான புகார்கள் எதுவும் வரவில்லை என்றும் எனவே அந்தத் தடுப்பூசியை நிறுத்தி வைக்கத் திட்டமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிபாதுகாப்பானது என்று உலகசுகாதார அமைப்பு தெரிவித் திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT