Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

மார்க்சிஸ்ட் வேட்பாளர்பட்டியல் வெளியீடு :

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கந்தர்வகோட்டை, திருப்பரங்குன்றம், அரூர், கீழ்வேளூர், கோவில்பட்டி, திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான மாநிலக்குழுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அந்த கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் வேட்பாளர் பட்டியலை மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

அதன்விவரம்; கோவில்பட்டி - கே.சீனிவாசன், அரூர் (தனி) - ஏ.குமார், கந்தர்வகோட்டை (தனி) - எம்.சின்னதுரை, திண்டுக்கல்- என்.பாண்டி, திருப்பரங்குன்றம்- எஸ்.கே.பொன்னுதாயி, கீழ்வேளூர் (தனி)-நாகை மாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்களும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதேபோல், இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெருவாரியான வெற்றியை பெறும். அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். இன்னும் 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’’என்றார். மேலும், கீழ்வேளூர் தவிர்த்து இதர 5 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x