Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

தென் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு :

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

குமரிக்கடல் பகுதியில் 1 கி.மீ. உயரம் வரை காற்றின் சுழற்சி நிலவுவதால் 10-ம் தேதி (இன்று) முதல் 13-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், பின்னர் தெளிவாகவும் காணப் படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x