Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

நாட்டில் 230 பேருக்கு மத்திய படைகள் பாதுகாப்பு : மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி பதிலளித்து கூறியதாவது:

எந்தெந்த நபர்களுக்கு விஐபி பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டுமோ அவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசிடம் மாநிலஅரசுகள் சமர்ப்பிக்கும். அதன்படி, குறிப்பிட்ட நபர்களின் அந்தஸ்து, உண்மையிலேயே அவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதை மத்திய பாதுகாப்புப் படை ஆய்வு செய்யும். அதன் பின்னரே, அவர்களுக்கு சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் படைகளின் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஒய், ஒய் பிளஸ், இசட், இசட் பிளஸ் என எந்த வகை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அது மட்டுமின்றி, பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா அல்லது மாற்றியமைக்க வேண்டுமா என்பதுகுறித்தும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் பரிசீலிக்கப்படும். தற்போது 230 பேருக்கு மத்தியபடைகள் பாதுகாப்பு வழங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x