Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(32). இவர் சாத்தூர் மார்க்கெட் பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறார்.
இவர் அனுமதியின்றி புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சாத்தூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப் படை போலீஸார் ராமலிங்கபுரத்தில் குடோனில் சோதனை நடத்தினர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் 68 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இவற்றைஅம்மாபட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT