Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

மதுக்கடையை ரூ.510 கோடிக்கு ஏலம் கேட்ட பெண்கள் :

ராஜஸ்தான் மாநிலம் ஹனு மன்கர் மாவட்டம் நோஹர் கிராமத்தில் உள்ள ஒரு மதுக்கடையை ஏலத்தில் எடுப்பதற்கான கூட்டம் நேற்று நேற்று முன்தினம் நடைபெற்றது. காலையில் 11 மணிக்கு ரூ.72 லட்சம் அடிப்படை விலையில் ஏலம் தொடங்கியது.

இந்த மதுக்கடையை ஏலம்எடுக்க அங்குள்ள நபர்களிடையே கடும் போட்டா போட்டி நிலவியது. தொடர்ந்து விலையை ஏற்றிக்கொண்டே வந்ததால் நள்ளிரவு வரை இந்த ஏலம் நீடித்தது. அதிகாலை 2 மணிக்கு ஏலம் முடிந்தது. அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் சேர்ந்து ரூ.510 கோடிக்கு இந்த மதுக்கடையை ஏலத்தில் எடுத்திருந்தனர்.

கடந்த ஆண்டு இந்த மதுக்கடையை வெறும் ரூ.65 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்திருந்தனர். இந்த ஆண்டு மதுக்கடையை ஏலம் எடுத்த பெண்களில் ஒருவரது பெயர் கிரண் கன்வார் எனத் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x