Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தெற்கு ரயில்வே பிரிவு அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி போடும் மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் தற்போது கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட வசதியாக ரிப்பன் மாளிகையிலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தெற்கு ரயில்வே பிரிவு அலுவலகத்திலும் கரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக ரயில்வே ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே தலைமை பொதுமேலாளர் ஜான் தாமஸ், மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT