Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
தாம்பரத்தை அடுத்த, பீர்க்கன்காரணை கலைவாணி தெருவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியரிடம் ``குடியிருப்புகள் நிறைந்த எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு அந்த கோபுரம் அமைந்தால் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைவரும் கோபுரத்தின் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும். எனவே பொதுமக்கள் உடல்நலம், மனநலம் ஆகியவற்றில் கருத்தில் கொண்டு செல்போன் கோபுரம் அமைவதை தடுக்க வேண்டும்’' என கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் கூறும்போது, ``உங்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT