Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

கண்மாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

வில்லிபுத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.

வில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவ ரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஐஸ்வர்யா, ஆனந்தஜோதி ஆகிய இரு மகள்களும், பிரதீப் (9) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று விளையாடுவதற்காக வெளியே சென்ற பிரதீப் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. குடும்பத்தினர் தேடி னர். இந்நிலையில், அப் பகுதியில் உள்ள சாத்தனேரி கண்மாயில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பிரதீப், நீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரிய வந்தது.

நத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x