Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேற்று விருப்ப மனு அளித்தார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த எச்.வசந்தகுமார் கரோனா பாதிப்பால் காலமானார். ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழகசட்டப்பேரவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 2-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
விருப்ப மனு அளிக்க கடைசி நாளான நேற்று கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி, சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் விருப்பமனு அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “கன்னியாகுமரி காங்கிரஸுக்கு செல்வாக்குள்ள தொகுதி. அங்கு பிரியங்கா போட்டியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதனால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கூட்டணிக்கு பலன் கிடைக்கும். எனவே, அவர் போட்டியிட வலியுறுத்தி விருப்ப மனு அளித்துள்ளேன்" என்றார்.
மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் கன்னியாகுமரியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT