Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

சிலையாகக் கதாபாத்திரம்சர்வதேச கவனம் பெற்ற எழுத்தாளர் தஹார் பென் ஜலூனின் ‘உல்லாசத் திருமணம்’ நாவல் ‘தடாகம்’ வெளியீடாக சு

சிலையாகக் கதாபாத்திரம்

சர்வதேச கவனம் பெற்ற எழுத்தாளர் தஹார் பென் ஜலூனின் ‘உல்லாசத் திருமணம்’ நாவல் ‘தடாகம்’ வெளியீடாக சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் மொழியாக்கத்தில் சென்ற ஆண்டு வெளியானது. நேரடியாக பிரெஞ்சிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த நாவல் மொழியாக்கத்துக்காக, பிரெஞ்சு அரசு வழங்கும் ரோமன் ரோலன் 2021 பரிசு சமீபத்தில் கிடைத்தது. இந்நாவலில், வெள்ளை நிறத் தந்தைக்கும் கறுப்பு நிறத் தாய்க்கும் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று கறுப்பு நிறத்திலும், ஒன்று வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. இதை மையமாக வைத்து ஒரு சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார் ஓவியர் ரோஹிணி மணி. ‘உல்லாசத் திருமணம்’ நாவலுக்கு அட்டைப்படம் வரைந்தவரும் இவர்தான். அரங்கு எண் 219 – 220-ல் இந்த அழகிய சிற்பம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x