Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

தள்ளாத வயதிலும் உழைத்து வாழ்ந்த 98 வயது முதியவருக்கு உ.பி. அரசு கவுரவம் :

ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தை சேர்ந்த 98 வயது முதியவர் விஜய் பால் சிங். இவர் தனது பகுதியில் ‘சன்னா’ (வேகவைத்த பட்டாணி) விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது.

இந்த வயதிலும் உடலை வருத்திக் கொள்ள வேண்டுமா என வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம் கேட்க, வீட்டில் அமர்ந்திருப்பதில் விருப்பமில்லை என்று விஜய் பால் சிங் கூறுகிறார்.

தள்ளாத வயதிலும் யாரையும் சார்ந்து வாழ விரும்பாத அவரது உறுதியை அறிந்து, ரேபரேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதியவர் விஜய் பால் சிங் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டார். அவருக்கு ரூ.11,000 ரொக்கம், ஊன்றுகோல், சால்வை மற்றும் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் வைபவ்  வஸ்தவா கவுரவித்தார். ஆட்சியர்  வஸ்தவா கூறும்போது, “முதியவருக்கு அரசுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு உள்ளது. அவருக்கு ரேஷன் அட்டையும் வீட்டில் கழிப்பறை கட்ட நிதியும் அளித்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x