Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

மாஹே பகுதியில் 18 கிலோ தங்கம் பறிமுதல் :

புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் கேரளத்தையொட்டிய மாஹேயும் ஒன்று. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், புதுச்சேரிக்கு உட்பட்ட மாஹே எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோழிகோட்டில் இருந்து கண்ணூர் பகுதிக்குமாஹே வழியே சென்ற ஒருவாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஏராளமான தங்கம் இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.

இதுபற்றி மாஹே உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘வாகனத்தில் இருந்த 18 கிலோதங்கம் பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது எனதெரியவந்துள்ளது. இதற்கு உரிய ஆவணங்கள் இருந்தாலும் வருமானவரித் துறை ஆய்வுக்கு உட்படுத்த, தங்கத்தை வாகனத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்’’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x