Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (51). டிஜிபி அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். உடல் நலக்குறைவால் கடந்த 1-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலையில் மர்மான முறையில் அறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடம் விரைந்து சுரேஷ் குமார் உடலை பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா, தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT