Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM
வாக்காளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் விநியோகம்: ஆட்சியரிடம் திமுக புகார்
உதகை: நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கக்காச்சி, மேல் பாரத் நகர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளப்பள்ளி மற்றும் கோத்தகிரி, மசினகுடி, மாயார் , பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர், தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு ஆளும் கட்சியினர் சென்று, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஒரு குடும்பத்துக்கு 25 கோழிக்குஞ்சுகளை வழங்கிவருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. அரசு அதிகாரிகளே வழங்குவது கண்டனத்துக்குரியது. எனவே, இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT