Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM

வேடசந்தூரில் ரூ.4.40 லட்சம் பறிமுதல் :

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.40 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காக்காத்தோப்புப் பிரிவில் பறக்கும்படை அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கிச் சென்ற குமரேசன் என்பவரின் காரை சோதனையிட்டனர். முறையான ஆவணங்கள் இன்றி ரூ.2.40 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பழையகன்னிவாடி பகுதியில் இருந்து வேடசந்தூர் நோக்கிச் சென்ற காமாட்சி என்பவரின் காரை சோதனையிட்டதில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட ரூ.4.40 லட்சத்தை வேடசந்தூர் தொகுதி உதவித் தேர்தல் அதிகாரி சக்திவேலிடம் பறக்கும்படையினர் ஒப்படைத்தனர்.

அதேபோல், கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படையினர், கிருஷ்ணன் என்பவர் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.62 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x