Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவரது எம்.பி. பதவியை பறிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாங்கத்தின் கருத்திலிருந்து மாறுபட்ட கருத்தை கூறுவதை தேசத்துரோகம் என்று சொல்ல முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பரூக் அப்துல்லாவுக்கு எதிரான பொதுநல வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக சீனா மற்றும் பாகிஸ்தான் உதவியை பரூக் அப்துல்லா கோரினார் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் உறுதிப்படுத்த தவறியதால் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT