Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

வேலை வாங்கி தருவதாக பெண்ணுடன் தொடர்பு : கர்நாடக அமைச்சர் ரமேஷ் ராஜினாமா :

பெங்களூரு: க‌ர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி பெண் ஒருவருடன் படுக்கையறையில் இருப்பது போன்ற அந்தரங்க வீடியோ ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தினேஷ் கல்லஹள்ளி, நேற்று முன்தினம் இரவு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும், பெங்களூரு கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிஹோலிக்கு எதிராக புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

அதில், "வடகர்நாடகாவைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் ஆவணப் படம் எடுப்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியை சந்தித்தார். அவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரமேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்தப் பெண் என்னிடம் பாதுகாப்பு கேட்டு வந்தார். தற்போது அந்தப் பெண்ணின் உயிருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலியின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார். ஆனால் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனிடையே, தினேஷ் கல்லஹள்ளி நேற்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்தை நேரில் சந்தித்து ரமேஷ் ஜார்கிஹோலி குறித்து புகார் தெரிவித்தார். அமைச்சர் பதவி விலகக் கோரி காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, ரமேஷ் ஜார்கிஹோலி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவிடம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x