Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு 2 மகன்கள். பாண்டியின் மகன்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

இளைய மகன் முத்துப்பாண்டி(7) எதிர்பாராது கிணற்றில் மூழ்கினான். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.

இரண்டாவது நாளாக நேற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது முத்துப்பாண்டியின் உடல் மீட்கப்பட்டது.

கூமாபட்டி போலீஸார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x