Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

தி.மலையில் தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்து டன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.

சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் வசிப்பவர் தொழிலாளி சுரேஷ். இவர், தனது மனைவி பேச்சியம்மாள் மற்றும் 2 குழந்தைகளுடன், தி.மலை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். அவரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, “நம்பேடு கிராமத்தில் 4 சென்ட் இடம் வாங்கியதாகவும், பின்னர் அளந்து பார்த்தபோது ஒரு சென்ட் குறைவாக இருப்பதாகவும், அந்த இடத்தை தனக்கு விற்பனை செய்தவர் அபகரித்துக் கொண்டதாகவும், அதனை பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x