Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி பனியன், சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்

கடலூரில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் அச்சிட்ட பனியன், சில்வர் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றுகடலூரில் நிலையான கண் காணிப்பு குழுவினர் நில எடுப்பு வட்டாட்சியர் விஜயா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் கடலூர் அருகே பெரியக்காட்டுப்பாளயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்டு ஏம்பலம் தொகுதி வேட்பாளர் பெயருடன் பனியன் மற்றும் சில்வர் பாத்திரங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்துகடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x