Published : 28 Feb 2021 03:20 AM
Last Updated : 28 Feb 2021 03:20 AM

காரில் கடத்தியகுட்கா பார்சல் பறிமுதல்

நாட்றாம்பள்ளி அருகே வாகன தணிக்கையில் காரில் கடத்தி வந்த குட்கா பார்சலை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பார்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் நாகேந்திரா (35) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். காருடன் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பார்சலையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x