Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

கடன் அட்டைக்கு போனஸ் பாயின்ட் தருவதாக மோசடி

சென்னை

புதுப்பேட்டை, கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வரபிரசாத். கடந்த 18-ம் தேதி, இவரது செல்போனில் பேசிய ஒருவர், தான் வங்கி மேலாளர் என்றும் கடன் அட்டை விவரங்களை கூறினால் போனஸ் பாயிண்ட் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய வரபிரசாத், தனது கிரெடிட் கார்டுகளின் விவரங்களையும் ஓடிபி எண்ணையும் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் வரபிரசாத்தின் கடன் அட்டைகளில் இருந்து ரூ.87,631 எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து வரபிரசாத் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வங்கி நிர்வாகத்திடம் பேசி வரப்பிரசாத் இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x