Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

மின்கம்பி உரசியதால் சோளத்தட்டு ஏற்றப்பட்ட லாரியில் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் அங்கேரிபாளையம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான லாரி, திருமுருகன் பூண்டி சுற்றுச்சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து சோளத்தட்டு ஏற்றிக்கொண்டு அனுப்பர்பாளையம் நோக்கி நேற்று சென்றது. ஆத்துப்பாளையம் பகுதியில், மின்சார கம்பி மீது உரசியதால் சோளத்தட்டில் தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக பரவியதால், பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், சோளத்தட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலானது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x