Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

முன்னாள் சிறைவாசிகள் சுய தொழில் தொடங்க நிதி

வேலூர்: வேலூரில் முன்னாள் சிறைவாசிகள் சுய தொழில் தொடங்க ரூ.3.50 லட்சத்துக்கான நிதியுதவி காசோலையை ஆப்கா மைய இயக்குநர் சந்திரசேகரன் வழங்கினார்.

வேலூரில் முன்னாள் சிறைவாசிகள் சுய தொழில் தொடங்குவதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் கிளை துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விஜயராகவலு தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆப்கா மைய இயக்குநர் சந்திரசேகரன், முன்னாள் சிறைவாசிகள் 14 பேருக்கு கறவை மாடு, ஆடு வாங்கவும், மளிகை கடை வைப்பது உள்ளிட்ட பல்வேறு சுய தொழில்களை தொடங்க தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3.50 லட்சத்துக்கான நிதியுதவி காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆப்கா துணை இயக்குநர் கருப்பண்ணன், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, சங்கப் பொருளாளர் குமரன் ஆர்.சீனிவாசன், அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x