Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கேலரிநீதிமன்றம் உத்தரவு

மீனவர் உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டைப் பார்க்க போதிய இடவசதி இல்லை.அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரி அமைக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

பின்னர் மனுதாரர் அளிக்கும் புதிய மனுவைப் பரிசீலித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x