Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

வேளாண் பல்கலை. துணைவேந்தருக்கு விருது

கோவை: தெலங்கானா வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதுடெல்லி இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து 6-வது தேசிய இளைஞர் மாநாட்டை டெல்லியில் நடத்தின. இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமாருக்கு 'சிறந்த துணைவேந்தர்' விருது வழங்கப்பட்டது.

இது தொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துணைவேந்தர் என்.குமார், கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் 589 மாணவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க வழி செய்துள்ளார். சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, வேளாண் கல்வியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியுள்ளார். அகில இந்திய தரவரிசையில் 33-வது இடத்தில் இருந்த வேளாண்மைப் பல்கலைக்கழகம் 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, துணைவேந்தருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x