Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

108 அதிமுகவினர் பழநியில் முடி காணிக்கை

பழநி

மீண்டும் எடப்பாடி பழனிசாமியே தமிழக முதல்வராகப் பதவியேற்க வேண்டி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் 108 பேர் பழநியில் முடிக் காணிக்கை செலுத்தினர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் தலைமையில் வந்தனர். தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க வேண்டி 108 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் மலைக்கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் வேலை வைத்து வழிபாடு நடத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் கூறு கையில், ஆனந்தவிநாயகர் கோயில் முன்பு வைத்து வழிபட்ட வெற்றிவேலை முதல்வரிடம் வழங்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x