Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 7-ம் நாள் நிகழ்வாக, நேற்று முன்தினம் நித்யகல்யாணப் பெருமாள்-ரங்கநாயகி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. பின்னர், கோயிலில் ருத்ர வேடத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, திருப்பள்ளியறை சேவை நடைபெற்றது.
8-ம் நாள் நிகழ்வாக நேற்று நித்ய கல்யாணப் பெருமாள் வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, திருப்பல்லக்கில் பெருமாள் மாடவளாகம், பெரியவீதி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. மாலை குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மற்றும் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி இன்று (பிப்.24) நடைபெறுகிறது, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுடன் இணைந்து திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி கண்டருளுதல் பிப்.27-ம் தேதியும் தெப்போற்சவம் மார்ச் 1-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT