Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

கோவை காட்டூர் பார்க் வீதியில் உள்ள ஜனநாயக மாதர் சங்க மாவட்டக் குழு அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர், தலையில் கறிவேப்பிலை கிரீடம் மற்றும் சின்ன வெங்காய மாலை அணிந்து கொண்டு, ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், அவற்றை முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷமெழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x