Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

உடுமலையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

கோவைக்கு வரும் 25-ம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக திரளான தொண்டர்களை அழைத்து வருவது மற்றும் அதற்கான வாகன ஏற்பாடு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் வடுகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x