Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

ரங்கம் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா பிப்.15-ம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய உற்சவமான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.

நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மேலவாசலில் உள்ள தெப்பக் குள மண்டபத்துக்கு மாலை 5 மணிக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளினார். தொடர்ந்து அங்கிருந்து இரவு11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x