Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

கீழையூர் ஜல்லிக்கட்டில் 24 பேர் காயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரை அடுத்த கீழையூர் வடபத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 475 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 225 வீரர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிவந்த காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 24 பேர் காயமடைந்தனர். அதில், படுகாயமடைந்த கீழவண்ணம் ராமநாதன்(25), கீழப்பழுவூர் வினித்(23), மேலப்பழுவூர் ராஜிவ்(32), பிச்சை(70), மலத்தான்குளம் ஜெனித்(25) ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி வி.பாஸ்கரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x