Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
திருவண்ணாமலை: ஆடுதுறை-53 மற்றும் கோ-51 ரக நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் முனைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் தென் பெண்ணையாறு – ஆழியார் கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில், கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அப்போது, குறைந்த கால நெல் ரகங்களான ஆடுதுறை- 53, ஆடுதுறை -37 மற்றும் கோ- 51 போன்றவற்றை பயிரிட்டு பயன்பெற லாம். மேலும், ஆடுதுறை-53 மற்றும் கோ- 51 நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT